This Article is From Jun 16, 2018

1வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்: தமிழக குடும்பத்துக்கு நடந்த சோகம்

பெற்றோரோடு உரங்கிக் கொண்டிருந்த, ஒரு வயதுக் குழந்தையை தூக்கி செல்வது, அங்கிருந்த சி.சி.டிவியில் பதிவாகியிருந்தது.

1வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்: தமிழக குடும்பத்துக்கு நடந்த சோகம்

குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் தரையில் அடித்து கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Pune:

புனேவுக்கு கட்டுமானத் தொழில் வேலைக்காக, குடும்பத்தோடு சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்தவரின் ஒரு வயது பெண் குழந்தை பாலியில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூலி தொழிலுக்கு சென்ற அந்த குடும்பம், வீடில்லாததால், தாங்கள் வேலை பார்த்து வந்த லோனி காபோர் என்ற இடத்தில், வெட்டை வெளியில் படுத்து உரங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது மர்ம நபர் ஒருவர், பெற்றோரோடு உரங்கிக் கொண்டிருந்த, ஒரு வயதுக் குழந்தையை தூக்கி செல்வது, அங்கிருந்த சி.சி.டிவியில் பதிவாகியிருந்தது.

அந்த பதிவை வைத்து மல்ஹாரி பன்சூத் என்பவரை போலீஸார் கைது செய்தனர். வியாழன் இரவு இந்த சம்பவம் நடந்தது. குழந்தையை காணவில்லை என்றவுடன், பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். அடுத்த நாள், அருகில் இருந்த ஓரிடத்தில் குழந்தை சடலமாக மீட்க்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் தரையில் அடித்து கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

“கைது செய்யப்பட்ட மல்ஹாரி பன்சூத் குற்றத்தை ஒப்புக் கொண்டார்” என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போஸ்கோவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

.