Bikaner :
ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் சரக்கு லாரியுடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 22 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
பிகானிர் மாவட்டத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 11-ல் இந்த கோர விபத்து இன்று காலை நடந்திருக்கிறது.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், '9 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்' என்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் லோக் பரிவாகன் பேருந்து சேவைக்கு சொந்தமான பேருந்துதான் விபத்தில் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Advertisement
விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
COMMENTS
Advertisement