This Article is From Oct 08, 2018

தொழில்நுட்ப கோளாரால் முடங்கிய 108 எண் சேவை சீரானது!

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் தடை ஏற்பட்டது

தொழில்நுட்ப கோளாரால் முடங்கிய 108 எண் சேவை சீரானது!

தமிழகம் முழுவதும் மருத்துவ ரீதியிலான அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு அலுவலகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 108 சேவை திடீரென முடங்கியது.

இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பலரும் 108 எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை என புகார் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, 044-40170100 என்ற மாற்று எண்ணை தற்காலிகமாக தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட 108 சேவை எண் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சீரானதாக தெரிவிக்கப்பட்டது.

.