This Article is From Jul 08, 2020

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி சபாநாயகர் தனபாலன் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
தமிழ்நாடு Posted by

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. 

தமிழக சட்டசபையில் முதல்வச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18ம்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு  சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

Advertisement

இந்த நிலையில், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சபாநாயகர் தனபாலன் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

இதனிடேயே அண்மையில் சபாநாயகருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு எதிராகச் செயல்படவில்லை. 11 எம்எல்ஏக்கள் தனியாகச் செயல்பட்டிருந்தாலும் இப்போது ஒரு அணியாகச் செயல்படுகிறோம்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 எம்எல்ஏக்கள் பிரிந்திருந்த சமயத்தில் தாக்கல் செய்யப்பட்டவை. எனவே இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை'' என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement