Read in English বাংলায় পড়ুন
This Article is From Sep 26, 2018

விமானத்திலேயே உயிரிழந்த 11 மாத குழந்தை! ஹைதராபாத்தில் ஏற்பட்ட சோகம்

தோஹாவில்(Doha) இருந்து ஹைதரபாத்(Hyderabad) வந்து கொண்டிருந்த விமானத்தில், 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Advertisement
நகரங்கள் ,

11 மாத குழந்தையான அர்னாவ் ஷர்மாவிற்கு, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது

Hyderabad:

தோஹாவில்(Doha) இருந்து ஹைதரபாத்(Hyderabad) வந்து கொண்டிருந்த விமானத்தில், 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கத்தார்(Qatar) ஏர்வேஸ் விமானாத்தில் பெற்றோர்களுடன் பயணித்து வந்த 11 மாத குழந்தை அர்னாவ் ஷர்மாவிற்கு, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து, விமானத்திலேயே குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர், ஹைதராபாத்தில் விமானம் தரையிறங்கியவுடன் குழந்தையை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், குழந்தையின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement