This Article is From Sep 27, 2018

திருவண்ணாமலையில் ட்ரெக்கிங் சென்ற 12 வெளிநாட்டவர் கைது

குரங்கணியில் நடந்த காட்டுத்தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து ட்ரெக்கிங் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

திருவண்ணாமலையில் ட்ரெக்கிங் சென்ற 12 வெளிநாட்டவர் கைது

திருவண்ணாமலை மலையில் ட்ரெக்கிங் செல்ல முயன்ற வெளிநாட்டவர் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் குரங்கணியில் கடந்த மார்ச் மாதம் 36 பேர் ட்ரெக்கிங் சென்றனர். அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதையடுத்து ட்ரெக்கிங் செல்வதற்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆன்மிக சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டவர் 12 பேர் திருவண்ணாமலை மலையில் ட்ரெக்கிங் செல்ல முயன்றுள்ளனர். இதுதொடர்பான தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேரில் சென்று வெளிநாட்டவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விவரங்கள் பெறப்பட்டு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.