Mumbai:
மகாராஷ்டிராவின், அகமத் நகர் பகுதியில் நாட்டு துப்பாக்கியால் தன்னைத்தானே தவறுதலாக சுட்டுக்கொண்ட 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இதனால் துப்பாக்கியின் உரிமையாளரான, உயிரிழந்த சிறுவனின் மாமா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உயிரிழந்த சிறுவன் அதித்யா பைரவநாத் மோர் ஆவான், துப்பாக்கியை கையில் வைத்திருந்த சிறுவன் திடீரென தவறுதலாக மார்பில் சுட்டுக் கொண்டான்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுவனின் மாமா நவநாத் மோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்று விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
Advertisement
COMMENTS
Advertisement