Read in English
This Article is From Aug 06, 2018

சரமாரியான துப்பாக்கிச் சண்டை - 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

சத்திஸ்கர் மாநிலம் சுக்மா அருகே 14 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்

Advertisement
இந்தியா
New Delhi:

சத்திஸ்கர் மாநிலம் சுக்மா அருகே 14 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மாநில தலைநகரான ராய்ப்பூரில் இருந்து 390 கி.மீ தொலைவில், சுக்மா மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி மற்றும் கொன்டா என்ற பகுதிகளுக்கு இடையே இருக்கும் வனப்பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மாவட்ட பாதுகாப்பு படை, சி.ஆர்.பி.எஃப், மற்றும் சிறப்ப அதிரடி படையினர் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். 200 மவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படைக்கும் இடையே சரமாரியான துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து மாவோயிஸ்டுகளின் 16 துப்பாகிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

Advertisement
Advertisement