Read in English
This Article is From Aug 27, 2018

ஐதராபாத்தில் 2 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!

ஐதராபாத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 14 வயதுச் சிறுமி, இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Advertisement
நகரங்கள்
Hyderabad:

ஐதராபாத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 14 வயதுச் சிறுமி, இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஐதராபாத்தின் ராஜூவ்குரகல்பாவில் அந்தச் சிறுமி, தன் பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டுக்குத் திரும்பவே இல்லை. இதையடுத்து, சிறுமியைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். போலீஸார், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று சிறுமி வசித்து வந்த இடத்துக்கு அருகாமையில் அவரது சடலம் கிடந்துள்ளது. உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது போலீஸ்.

இது குறித்து மீர்பெட் இன்ஸ்பெக்டன் ரங்கசுவாமி, ‘அவரது உடல் இங்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம். சிசிடிவி வீடியோ மூலம் அது குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். சிறுமி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா என்று பிரேத பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement