Read in English
This Article is From Jul 05, 2018

குர்கானில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 பேர் கைது!

டெல்லியை அடுத்துள்ள குர்கானில் இருக்கும் ஒரு ஸ்பாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Advertisement
நகரங்கள்
Gurgaon:

டெல்லியை அடுத்துள்ள குர்கானில் இருக்கும் ஒரு ஸ்பாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 வெளிநாட்டவரும் அடங்குவர். 

தாய்லாந்தைச் சேர்ந்த 5 பெண்கள் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களைத் தவிர மணிப்பூரைச் சேர்ந்த 5 பெண்கள், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 4 ஆண்கள், இரண்டு வாடிக்கையாளர்கள் ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

குர்கான் போலீஸ் துறையின், பி.ஆர்.ஓ சுபாஷ் போகன் இது குறித்து, ‘போலீஸ் கமிஷனர் கே.கே. ராவ் உத்தரவுக்கிணங்க இந்த ரெய்டு நடவடிக்கை செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் அனைவரின் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்பா உரிமையாளர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. ஸ்பா உரிமையாளர் யுத்வீர் சிங் தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்பா-வின் மேலாளர் மற்றும் அவரது உதவியாளரையும் ரெய்டின் போது கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார்.

குர்கானில் இருக்கும் செக்டார் 29-இல் தான் இந்த ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, மேலும் 2 இரவு விடுதிகளில் போலீஸ் ரெய்டு செய்துள்ளது. அப்போது சட்டத்துக்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சாட்டி 7 பேரை போலீஸ் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement