This Article is From Jun 13, 2018

உத்தர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து: 17 பேர் பலி!

உத்தர பிரதேசத்தில் இருக்கும் மணிப்புரி மாவட்டத்தில், சாலையில் இருந்த டிவைடரில் மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது

விபத்துக்கு உள்ளாகி கவிழ்ந்து கிடக்கும் பேருந்து

ஹைலைட்ஸ்

  • உ.பி, மணிப்புரி மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது
  • 12 பேருக்கு இதனால் காயம் ஏற்பட்டுள்ளது
  • 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது
Lucknow:

உத்தர பிரதேசத்தில் இருக்கும் மணிப்புரி மாவட்டத்தில், சாலையில் இருந்த டிவைடரில் மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த 12 பேரில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. தொடர்ந்து 12 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேருந்தின் ஓட்டுநரும் இந்த விபத்தில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுவரை விபத்துக்கு என்ன காரணமானது என்று தெரியவில்லை. ஆனால், முதற்கட்டத் தகவல் ஓட்டுநர் வேகமாக பேருந்தை செலுத்தியதால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுநரின் வாக்குமூலத்தைப் பெற போலீஸ் முயன்று வருகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். காயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் செய்யுமாறு முதல்வர் பணித்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

.