Read in English
This Article is From Jul 23, 2018

புதுச்சேரியில் 16 வயதுப் பெண் 8 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்!

புதுச்சேரியைச் சேர்ந்த 16 வயதுப் பெண்ணை 8 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

Advertisement
தெற்கு
Puducherry:

புதுச்சேரியைச் சேர்ந்த 16 வயதுப் பெண்ணை 8 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த, பாதிக்கப்பட்ட 16 வயதுப் பெண்ணை, முக்கிய குற்றவாளி என புகார் அளிக்கப்பட்டுள்ள நபர், வழுதாவூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பலாத்கார சம்பவத்தை தன் மொபைல் போனில் வீடியோவாக எடுத்து, அந்த நபர் பெண்ணை மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த நபர், பெண்ணை இன்னொரு இடத்துக்கு வரச் சொல்லி தன் 7 நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிகிறது. 

இனிமேலும் பொறுக்க முடியாது என்று எண்ணிய பெண், தன் பெற்றோர்களிடம் நடந்த சம்பவம் குறித்து தெரியபடுத்தியுள்ளார். அவர்கள், பெண்ணை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் குழந்தை நல கமிட்டிக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்துள்ளது. 

குழந்தை நல கமிட்டி, பெண்ணின் புகாரை பதிவு செய்துள்ளனர். அவர்கள் மூலம் திருக்கானூர் காவல் நிலையத்தில் போஸ்கோ பிரிவின் கீழ் 8 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், 8 பேரும் தற்போது தலைமறைவாக இருக்கின்றனர். போலீஸ் தரப்பில், சிறப்புப் படை அமைத்து, குற்றம் சுமத்தப்பட்டுள்ள 8 பேரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement