கனடாவின் க்யூபெக் விமான நிலையத்தில், விமானத்துக்கு புறப்பாடு பரிசோதித்து விமானத்திக்குள் சென்ற 185 பயணிகளின் உடல்நிலை திடீரென பாதிப்புக்குள்ளானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து பயணிகளும் ட்ரான்சாட் விமானம் 782ல் ஏறி அமெரிக்காவின் போர்ட் லாடர்டேலுக்கு 11 மணிக்கு கிளம்பிய விமானத்தில் உள்ள பயணிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
பயணிகளுக்கு டேக் ஆஃப்புக்கு முன்னால் கண் எரிச்சல், தலைசுற்றல் மற்றும் வாந்தி அறிகுறிகள் ஏற்பட்டன என்று ஸின்ஹா செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
கனடா மீடியாக்களில் உடனடியாக 5 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
க்யூபெக் விமான நிலையத்தில் மீட்பு படையினர் விரைந்து காற்றின் தரத்தை சோதித்தனர். அதில் சோதனையில் நன்றாக உள்ளது என்று அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது சொந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது. ஏர்லைன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விமானத்தில் வெண்டிலேஷன் பிரச்சனை இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.