Tirunelveli:
குற்றால அருவியில் குளிக்கும் போது 19 வயது கர்ப்பிணி பெண் காளீஸ்வரி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார். காளீஸ்வரி அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மயங்கிய காளீஸ்வரியை தென்காசியியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார். அருவியில் குளிக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார் எனத் தெரிய வந்துள்ளது.
சோர்வு காரணமாக மயக்கம் அடைந்தாரா அல்லது அருவியின் வேகத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாரா என்பது உடற்கூறாய்வுக்கு பின்பே தெரியவரும்.
COMMENTS
Advertisement