Read in English
This Article is From Dec 02, 2018

2-வது நாளிலும் இந்தியில் வசூலை குவித்தது ரஜினியின் 2.0

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் 2.0 திரைப்படம் நல்ல வசூலை உலகெங்கும் குவித்து வருகிறது.

Advertisement
Entertainment Posted by

2.0 திரைப்படத்தில் ரஜினிகாந்த்

New Delhi:

உலகம் முழுவதும் வெளியிடப்பட்டிருக்கும் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஹீரோவாக ரஜினியும் வில்லன் கேரக்டரில் அக்ஷய் குமாரும் நடித்திருக்கின்றனர்.

பறவை ஆர்வலராக அக்ஷய் குமார் வருகிறார். தொழில்நுட்பங்கள் பறவையினங்களை அழிப்பதாகவும், அதற்கு பழி தீர்க்கும் வகையில் ராட்சத பறவையாக அக்ஷய் குமார் மாறுவதாகவும் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தியில் அக்ஷய் குமாருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அங்கு சுமார் 40 சதவீத திரையரங்குகளில் 2.0 திரையிடப்பட்டுள்ளது.

 

கடந்த வியாழன் அன்று படம் திரையிடப்பட்டது. அன்றைய தினம் மட்டும் ரூ. 20.25 கோடியை படம் வசூலித்தது. 2-வது நாளான நேற்று 18 கோடியை 2.0 அள்ளியிருக்கிறது. 2 நாட்களில் மொத்தம் ரூ. 38.25 கோடியை 2.0 வசூலித்துள்ளது.

 

Advertisement

 

 

மொத்தம் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்செலவில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் மூலமாக ரூ. 370 கோடிக்கும் அதிகமான தொகையை தயாரிப்பாளர்கள் கலெக்ஷன் செய்துள்ளனர்.

Advertisement
Advertisement