This Article is From Apr 25, 2020

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 2,81,975 வழக்குகள் பதிவு: காவல்துறை தகவல்

வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 2,81,975 வழக்குகள் பதிவு: காவல்துறை தகவல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 2,81,975 வழக்குகள் பதிவு: காவல்துறை தகவல்

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 2,81,975 வழக்குகள் பதிவு
  • தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,99,108 கைது
  • ஊரடங்கை மீறியதாக 2,52,943 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,81,975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தமிழக காவல்துறை தகவல் அளித்துள்ளது.  

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச்.24ம் தேதி முதல் ஏப்ரல்.14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டது. 

ஆனாலும், கொரோனா நோய் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து வருகிற மே.3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் மே.3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்றார்.

இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள்  வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது   நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,99,108 கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13, 958 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், ஊரடங்கை மீறியதாக 2,52,943 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,173 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,81,975 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ.2.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது. கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசைப் படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. 

.