Washington:
அமெரிக்காவின் இந்தியானாபோலிஷ் மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் இந்தியா -அமெரிக்க சீக்கியர்கள் இருவர் உயிரிழ்ந்தனர், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
எஸ்யூவி வாகனம் மரத்தில் மோதியதில் பாதிக்கப்பட்டவர்கள் வருண்தீப் எஸ் பிரிங் (19) தவ்நீத் எஸ் சலால் ஆகிய இருவரும் ஃபிஸ்சர்ஸ் சிட்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
எஸ்யூவி வாகனத்தை ஓட்டிய தவ்நீத் சீட் பெல்ட் அணியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த குஜராத் எஸ் சந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்குள்ள சீக்கிய குடும்பங்கள் யாவும் ஆழ்ந்த மன வருத்தத்தை அடைந்துள்ளது. இரண்டு இளைஞர்கள் இறந்த குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்து வருகிறது.
Advertisement
COMMENTS
Advertisement