இராமேசுவரம்: இராமேசுவரம் மண்டபம் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு அகதிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக இயக்கப்பட்டு வந்த படகில் ஏறி செல்ல முயன்ற ஜாப்னாவை சேர்ந்த சாய்சன் (26), ஜெயகுமார் (27) ஆகிய இரண்டு இலங்கை அகதிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், கடல் வழியாக இலங்கைக்கு செல்பவர்களுக்கு உதவி செய்து வந்த பாஸ்கரன், குமார் ஆகிய படகோட்டிகளை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)