This Article is From Aug 21, 2018

சென்னை விமான நிலையத்தில் வெடிப் பொருட்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கிய 2 பேங்காக் வாசிகளிடம் இருந்து வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

சென்னை விமான நிலையத்தில் வெடிப் பொருட்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கிய 2 பேங்காக் வாசிகளிடம் இருந்து வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவா விமான நிலையத்தில் இருந்து சென்னை வந்தடைந்த பயணிகளை, விமான நிலைய காவல் துறையினர் சோதனை செய்துள்ளனர். சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இரண்டு பேங்காக் வாசிகள் நடந்து கொண்டுள்ளனர். அதனால், தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர், பயணிகளின் பையில் வெடிப் பெருட்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

சுதந்திர தின சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கும் பயணிகளின் பைகளை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று வெடிப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இதனால், சென்னையில் இருந்து கோவா செல்ல வேண்டிய விமானம் அரை மணி நேரம் தாமதாக கிளம்பியது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.