हिंदी में पढ़ें Read in English
This Article is From May 20, 2019

டெல்லியில் கேங் வார்… நகரின் பிஸி டிராஃபிக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர்!

சொத்துத் தகராறால் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது. 

Advertisement
Delhi Edited by
New Delhi:

தென் மேற்கு டெல்லியில் உள்ள துவார்கா மோட் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இரண்டு கேங்குளுக்கு இடையில் நேற்று பட்டப் பகலில், பிஸி டிராஃபிக்கில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் இறந்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

போலீஸ் மேலும், ‘சுட்டுக் கொல்லப்பட்ட பர்வீன் கெலோட் மற்றும் விகாஸ் தலால் ஆகியோர் மீது டெல்லி மற்றும் ஹரியானாவில் பல கொலை மற்றும் கொள்ளை வழுக்குகள் நிலுவையில் உள்ளன' என்றனர்.

சொத்துத் தகராறால் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது. 

Advertisement

நேற்று, மாலை 4 மணி அளவில், பர்வீன் கெலோட் சென்று கொண்டிருந்த காரை, இன்னொரு கார் மூலம் சிலர் வழிமறித்தனர். திடீரென்று கெலோட் இருந்த கார் மீது சரமாரியாக, இன்னொரு கேங் சுட ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவத்தால் அருகில் இருந்த சாதாரண மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

துப்பாக்கி சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீதும் போலீஸார், பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. 

Advertisement

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்த மேலும் இருவர், தப்பித்துவிட்டனர். தப்பித்துச் சென்ற நபர்கள் யார் என்பதை கண்டுபிடித்து விட்டதாகவும், அவர்களைப் பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கூறியுள்ளது. 

பிந்தாபூர் காவல் நிலையத்தில், இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

 
 

Advertisement