हिंदी में पढ़ें Read in English
This Article is From Mar 05, 2019

புல்வாமாவில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

புல்வாமா என்கவுண்டர்: புல்வாமாவில் இரண்டு தீவிரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

புல்வாமா என்கவுண்டர்: புல்வாமாவின் ட்ராலில் இந்த தாக்குதல் நிகழ்ந்தது.

Srinagar:

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று காலை தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

புல்வாமாவின் ட்ராலில் இரண்டு தீவிரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் மொபைல் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.

பின்னர் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த பிப்.14ஆம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

Advertisement

இதைத்தொடர்ந்து இந்திய விமானப்படைகள் பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியில் புகுந்து பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது மிகப்பெரிய தீவிரவாத பயிற்சி முகாமை முற்றிலும் அளித்தது.

இதன்பின், கடந்த பிப்.20ஆம் தேதி புல்வாமாவில் நடந்த தாக்குதலில், ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தனர். புல்வாமா தாக்குதலுக்கு மூலக்காரணமாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இந்திய தலைவன் 12மணி நேரம் நடந்த தொடர் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

Advertisement

 

மேலும் படிக்க - "எதிரியின் எல்லைக்குள் புகுந்து அழிப்பதே நமது ஸ்டைல்!"

Advertisement