Read in English
This Article is From Oct 06, 2019

கனமழைக்கு மத்தியில் விழுந்து நொறுங்கிய போர்விமானம்! 2 பைலட்டுகள் உயிரிழப்பு!!!

கனமழை காரணமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண் பைலட் ஆவார்.

Advertisement
இந்தியா

தெலங்கானாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Hyderabad:

கனமழைக்கு மத்தியில் போர் விமானம் ஒன்று வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உள்பட 2 பயிற்சி பைலட்டுகள் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டம் பந்த்வாரம் மண்டல் என்ற பகுதியில் இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.

கனமழையால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விபத்து நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்திற்கு சொந்தமானது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண் பைலட் ஆவார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement
Advertisement