Read in English
This Article is From Nov 12, 2019

உ.பியில் ஏமாற்றிய காதலியை சுட்டுக் கொன்ற வாலிபர் கைது

குற்றவாளி பிரசாத்தும் அந்த பெண்ணும் கடந்த ஒரு வருடமாக உறவில் இருந்து வந்துள்ளனர். சில மாதங்களாக அப்பெண் வேறொருவரைக் காதலித்து பிரசாத்தை புறக்கணித்து வந்தார்.

Advertisement
இந்தியா Edited by

காவல்துறையினர் நாட்டு துப்பாக்கி இரண்டு தோட்டக்கள் மற்றும் இரத்த கறைகளைக் கொண்ட சட்டை ஆகியவை மீட்டுள்ளனர். (Representational)

Kaushambi:

உத்தர பிரதேச மாநிலம் கசாம்பியில் 16 வயது பெண்ணையும் அவரது சகோதரரையும் 20 வயது இளைஞன் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சம்பவம் நடந்த போது பெண்ணின் தாய் வீட்டில் இல்லை. குற்றவாளி பிரசாத்தும் அந்த பெண்ணும் கடந்த ஒரு வருடமாக உறவில் இருந்து வந்துள்ளனர். சில மாதங்களாக அப்பெண் வேறொருவரைக் காதலித்து பிரசாத்தை புறக்கணித்து வந்தார். இதனால் கோபமடைந்த பிரசாத் அப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். சத்தம் கேட்டு வந்த இளைய சகோதரனையும் பிரசாத் சுட்டுக் கொன்றுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட கங்கா பிரசாத் பஷி காபூர்வா கிராமத்தில் வசிப்பவர். காவல்துறையினர் நாட்டு துப்பாக்கி இரண்டு தோட்டக்கள் மற்றும் இரத்த கறைகளைக் கொண்ட சட்டை ஆகியவை மீட்டுள்ளனர். 

16 வயது சிறுமியும் அவரது சகோதரரும் வீட்டில் இறந்து கிடந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக 302, 147, 506 மற்றும் 449 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement