Read in English
This Article is From Nov 04, 2018

ராணுவ வீரர் போல நடித்து மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது!

ராணுவ அதிகாரி போல நடித்து மக்களை ஏமாற்றி வந்த 29 வயது இளைஞரை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது

Advertisement
நகரங்கள்

அந்த நபர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்

New Delhi:

ராணுவ அதிகாரி போல நடித்து மக்களை ஏமாற்றி வந்த 29 வயது இளைஞரை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

olx மூலம் தொடர்பு கொண்டு ராணுவ வீரர் போல பேசிய நபர் ஆப்பிள் ஐ-போன் 7ஐ மலிவாக தருவதாக கூறியுள்ளார். மேலும், போனை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கொண்டு வந்து தருமாறு கூறியுள்ளார் என உதவி காவல் ஆய்வாளர் சஞ்சய் பாட்டியா தெரிவித்தார்.

மேலும், அந்த மோசடி நபர் ரூ35,000 வங்கி கணக்கில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டு பணத்தையும் பெற்றுள்ளார். ஆனால், போன் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையின் போது பேடிஎம் கணக்கின் தகவல்களை போலீசார் பெற்றனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் மோசடியில் ஈடுபட்டவரை கண்டுபிடித்தனர்.

Advertisement
Advertisement