This Article is From Jan 24, 2019

2வது முதலீட்டாளர்கள் மாநாடு: ரு.3 லட்சம் கோடியை தாண்டி முதலீடு எனத் தகவல்!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தொடங்கி வைத்தார்.

2வது முதலீட்டாளர்கள் மாநாடு: ரு.3 லட்சம் கோடியை தாண்டி முதலீடு எனத் தகவல்!

நிறைவு நாள் விழாவான இன்று, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். 

ஹைலைட்ஸ்

  • மாநாடு நேற்றுத் தொடங்கியது
  • இன்று மாநாடு நிறைவுபெற்றது
  • துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று பங்கேற்றார்

சென்னையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று முடிவடைந்தது. இந்நிலையில், இந்த மாநாட்டின் மூலம் 3 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்ய புரிந்தணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் நிறைவு நாள் அன்று ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 2-வது முறையாக அம்மாநாடு நடைபெற்றுள்ளது. மாநாட்டில் பங்கேற்க 2,900 முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிறைவு நாள் விழாவான இன்று, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். 

இந்நிலையில் மாநாடு நிறைவின் போது உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க, இலக்கு நிர்ணயித்திருந்தோம். ஆனால், அதைத் தாண்டிவிட்டோம். சுமார், 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, இந்த இரண்டு நாட்களில் மட்டும் கையெழுத்தானது. தொழில் நிறுவனங்கள் முதலீடு மூலம் 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். முதலீட்டாளர்கள் மாநாட்டில்  பங்கு பெற்று முதலீடு செய்த நிறுவனங்களுக்கு நன்றி. 2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

.