Read in English
This Article is From Dec 20, 2018

சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்: 3 கல்லூரி மாணவிகள் கடலில் மூழ்கி பலி!

காவிரி கடலோடு சங்கமிக்கும் இடத்தில் இன்று காலை கல்லூரி மாணவிகள் குளித்துக்கொண்டிருந்த போது, சேற்றில் சிக்கி 3 மாணவிகளும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

Advertisement
Tamil Nadu
Nagapattinam:

மயிலாடுதுறையில் உள்ள மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் தங்களது தோழிகள் உட்பட 7 பேருடன் இன்று காலை பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது, சிவபிரியா, மஞ்சு, விவோகா ஆகிய 3 மாணவிகள் மட்டும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக 3 மாணவிகளும் சேற்றில் சிக்கி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைப்பார்த்த சகமாணவிகள் செய்வதறியாது அலறி துடித்துள்ளனர். மாணவிகளின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் உயிரிழந்த மாணவிகளின் உடலை கரைக்கு மீட்டு வந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து மாணவிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement