Read in English
This Article is From Sep 04, 2018

டிராவல்ஸ் தொழிலில் நஷ்டம்… கோவையில் மூவர் தற்கொலை!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், டிராவல்ஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது

Advertisement
தெற்கு
Coimbatore:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், டிராவல்ஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 

கோயம்புத்தூரைச் சேர்ந்த வைரமுத்து என்ற நபர், டிராவல்ஸ் தொழில் நடத்தி வந்துள்ளார். அவரது தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வைரமுத்து தூக்கிட்ட நிலையில் அவரது வீட்டில் கிடந்துள்ளார். அவரது அப்பா பாலசுப்ரமணியம் மற்றும் அம்மா லக்‌ஷ்மி ஆகியோர் தரையில் ரத்த வெள்ளத்துடன் கிடந்துள்ளனர். 

தானும் தனது பெற்றோரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வைரமுத்து, திருப்பூரில் உள்ள தனது அத்தைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தைப் பார்த்து திடுக்கிட்ட உறவினர்கள் காவல் துறையிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, வைரமுத்துவின் வீட்டுக்கு போலீஸும் அவரது உறவினர்களும் வந்து பார்த்த போதுதான் மூவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிந்துள்ளது. 

Advertisement
Advertisement