বাংলায় পড়ুন Read in English
This Article is From May 29, 2019

5 மணிநேரமாக மோடி - அமித் ஷா மீட்டிங்! அமைச்சர்கள் பட்டியல் தயாரானது!!

புதியதாக பொறுப்பேற்கவுள்ள அரசின் அமைச்சர்களின் பட்டியலை மோடியும், அமித் ஷாவுக்கும் தயார் செய்துள்ளனர். அவர்களுக்கு நாளை காலை தேநீர் விருந்தை மோடி அளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
இந்தியா Written by

அருண் ஜெட்லியை அமைச்சரவையில் சேர்ப்பதற்கு மோடியும் அமித் ஷாவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

New Delhi:

மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில், அமைச்சர்கள் பட்டியலை பிரதமர் மோடியும் - பாஜக தலைவர் அமித் ஷாவும் இறுதி செய்துள்ளனர். இதற்காக நேற்று மட்டும் சுமார் 5 மணிநேர ஆலோசனையை இருவரும் நடத்தினர். 

தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜக 302 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் கூட்டணி கட்சிகளை அரவணைத்து அவர்களுக்கும் அமைச்சரவையில் பாஜக இடம் அளித்துள்ளது. பெரும்பாலும் முந்தைய அரசில் இருந்தவர்கள் மீண்டும் அமைச்சர்களாக இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காவும், எனது உடல்நலனுக்காகவும் என்னை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். புதிய அரசில் எனக்கு பொறுப்பு அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்'  என்று குறிப்பிட்டுள்ளார். 

சர்க்கரை நோயால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த ஆண்டு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலை மேலும் மோசமாகியுள்ளது. புதிய அரசில் அவர் இடம்பெற வேண்டும் என அமித் ஷாவும், மோடியும் விரும்புகின்றனர். இதற்காக அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

Advertisement

அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களுக்கு பிரதமர் மோடி நாளை காலை தேநீர் விருந்து அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் தமிழ்நாட்டை  சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்களா என்பது தமிழகத்தில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 

Advertisement