Read in English
This Article is From Dec 09, 2018

ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர் என்கவுண்டர்: கடந்த 17 மணி நேரமாக நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Advertisement
இந்தியா
Srinagar:

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த 17 மணி நேரமாக நடந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.

ஸ்ரீநகரில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள முஜ்குன்ந் கிராமத்தில், தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் பதுங்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், துப்பாக்கி சூடு, வெடிமருந்துகள் மற்றும் இதர பொருட்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து தாக்குதல் அதிகமானது.

Advertisement

தொடர்ந்து தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே இருந்து வெடி பொருட்கள் அகற்றும் வரையிலும் அப்பகுதி மக்கள் யாரும் வர வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.

Advertisement