Read in English
This Article is From Sep 21, 2018

மத்திய பிரதேசத்தில் 3 வயது குழந்தை பலாத்காரம்

குற்றச் செயலில் ஈடுபட்ட பள்ளி வாகன கண்டக்டர் தான் சிறுவன் என்று கூறி வருகிறார்.

Advertisement
Bhopal

மத்திய பிரதேசத்தில் 3 வயது குழந்தையை நடத்துனர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Bhopal:

மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுமியை வேன் கண்டக்டர் ஒருவர் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

போபாலில் வியாழன் அன்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில் ஈடுபட்ட குற்றவாளியான வேன் கண்டக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி பல்ஜீத் சிங் கூறும்போது, சிறுமியை பலாத்காரம் செய்தவரை கைது செய்து விட்டோம். ஆனால் அவர் தனக்கு 17 வயதுதான் ஆகிறது என்றும், தான் சிறுவன் என்றும் கூறி வருகிறார். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமி தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வேன் கண்டக்டரை நாங்கள் கைது செய்துள்ளோம். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 ஏ.பி., பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என மத்திய பிரதேச சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement