Read in English
This Article is From Oct 26, 2019

Bigil பட ரிலீஸ் தாமதம்… அட்டூழியம் செய்த 30 பேர் - கைது செய்த காவல்துறை!

அட்டகாசம் செய்த நபர்களை கைது செய்து சட்ட ஒழுங்கை மீட்டுக் கொண்டு வந்தனர். 

Advertisement
தமிழ்நாடு Edited by

சிலர், கல்வீச்சிலும் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பு சொல்கிறது

Krishnagiri :

கிருஷ்ணகிரி (Krishnagiri) மாவட்டத்தில் ‘பிகில்' (Bigil) திரைப்படத்திற்கான சிறப்புக் காட்சி (Secial Show) நேரம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து போலீஸார் 30 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

கிருஷ்ணகிரியில், இன்று அதிகாலை 1 மணி அளவில் பிகில் படத்தின் முதல் சிறப்புக் காட்சி போடப்பட இருந்தது. ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது சாத்தியப்படாமல் போனது. இதனால், சிறப்புக் காட்சியின் நேரத்தை அதிகாலை 3 மணிக்கு மாற்றியுள்ளனர். 

இதனால் டிக்கெட் வாங்கியவர்கள் எரிச்சலடைந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள், பாதுகாப்புகளுக்காக வைக்கப்பட்டிருந்த பாரிகட், பலகைகள் உள்ளிட்டவற்றை அடித்து உடைத்துள்ளனர். பேனர்கள் மற்றும் கொடி கம்பங்களைக் கொளுத்தியுள்ளனர். சிலர், கல்வீச்சிலும் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பு சொல்கிறது. 

Advertisement

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டனர். அவர்கள், அட்டகாசம் செய்த நபர்களை கைது செய்து சட்ட ஒழுங்கை மீட்டுக் கொண்டு வந்தனர். 


 

Advertisement
Advertisement