This Article is From Jul 18, 2018

இலங்கைக்கு கடத்த இருந்த 304 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த்ச் இருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்

இலங்கைக்கு கடத்த இருந்த 304 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேஷ்வரம்: ராமேஷ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிகாலை 3 மணி அளவில், சீனியப்பா கடற்கரை அருகே மூன்று பேர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கு வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்த கியூ பிரான்ச் காவல் துறையினர், 150 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரை விசாரித்ததில், 304 கிலோ கஞ்சா பொருட்களை இலங்கைக்கு கடத்த இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இலங்கைக்கு கடத்த்ச் இருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து, தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.