Read in English
This Article is From May 18, 2020

ம.பியில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு!

இரண்டு குடும்பங்களை சேர்ந்த 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் என 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 பேர் படுகாயமைடைந்துள்ளனர்.

Advertisement
இந்தியா

ம.பியில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் தீ விபத்தில் உயிரிழப்பு! (Representational)

Gwalior:

மத்திய பிரதேசத்தின் கவாலியரில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 4 பேர் இந்த தீ விபத்தில் காயமடைந்துள்ளனர். 

இதுதொடர்பாக  காவல் கண்காணிப்பாளர் சந்தியேந்திர தோமர் கூறும்போது, இந்தர்கன்ஜ் பகுதியின் ரோஷினி கார் சாலையில் உள்ள பெயிண்ட் கடையில் இன்று காலை 10 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த தீ மேலே இருந்த குடியிருப்பு பகுதிக்கும் பரவியுள்ளது. 

எளிதில் தீ பற்றக்கூடிய பெயிண்ட் இந்த தீ விபத்து மேலும் பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் அந்த வளாகத்தின் 2வது மாடியில் இருந்துள்ளனர். கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் வெளியே வர முடியாமல் அவர்கள் சிக்கியுள்ளனர். 

இதில், இரண்டு குடும்பங்களை சேர்ந்த 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் என 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 பேர் படுகாயமைடைந்துள்ளனர். தீ விபத்திற்கு உள்ளான அந்த பெயிண்ட் கடை சகோதரர்கள் 3 பேருக்கு சொந்தமானது. 

Advertisement

கிட்டத்தட்ட 2 மணி நேரமாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று அவர் கூறினார். 

Advertisement