This Article is From Nov 19, 2018

டெல்லியில் தீ விபத்து… 4 பேர் பரிதாப சாவு!

Karol Bagh fire: டெல்லியின் மிகவும் நெரிசலான கரோல்பாக் தெருவில் இன்று தீ விபத்து ஏற்பட்டது

டெல்லியில் தீ விபத்து… 4 பேர் பரிதாப சாவு!

இன்று மதியம் 12:23 அளிவில் தீ வித்து ஏற்பட்டதாக தெரிகிறது

New Delhi:

தலைநகர் டெல்லியின் மிகவும் நெரிசலான கரோல்பாக் தெருவில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோல்பாக் தெருவிலிருந்த ஒரு நிறுவனத்தில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் 12:23 அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்தவுடன், தீயணைப்புத் துறை, 2 தீயணைப்பு வண்டிகளை சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ளது. தொடர்ந்து தீயை முற்றிலுமாக அணைக்கப் போராடி வருகின்றனர் தீயணைப்பு வீரர்கள். தீ விபத்துக்கான காரணம் என்னவென்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

.