New Delhi:
2021-ம் ஆண்டுக்குள் ரயில்வேயில் 4 லட்சம்பேருக்கு வேலை வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோயல் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசிதாவது-
கடந்த ஆண்டு 1.51 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தோம். ரயில்வேக்கு மொத்தம் 15.06 லட்சம் பணியிடங்கள் உள்ளன.
இவற்றில் 12.23 லட்சம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். மீதம் 2.82 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நிரப்பி விடுவோம்.
Advertisement
22 ரயில்வே தடங்கள் நீட்டிப்பு செய்யப்படும். மத்திய அரசு உயர் பிரிவினரில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. ரயில்வே பணியிடங்களை நிரப்பும்போது இந்த இட ஒதுக்கீடு அவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
COMMENTS
Advertisement