தெற்கு காஷ்மீரின், புலவாமா மாவட்டத்தில் உள்ள ஹன்ஜன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் வந்தது.
Srinagar: இன்று காலை ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் புலவாமா மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரின், புலவாமா மாவட்டத்தில் உள்ள ஹன்ஜன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து, அந்த இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது ராணுவம். தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைக்கும்போது, அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த ஆரம்பித்தனர்.
இதற்கு பாதுகாப்புப் படையும் பதிலடி கொடுத்தது. அந்த பதில் தாக்குதலில்தான் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.