This Article is From Oct 04, 2018

ஊட்டி அருகே கார் விபத்தில் சென்னையை சேர்ந்த 5 சுற்றுலா பயணிகள் பலி!

மலையின் வளைவுப் பகுதியில் கார் திரும்பிய போது நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி அருகே கார் விபத்தில் சென்னையை சேர்ந்த 5 சுற்றுலா பயணிகள் பலி!

காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்க செல்போன் ஆபரேட்டர்களின் உதவியை போலீசார் நாடினர்.

Chennai:

சென்னையைச் சேர்ந்த 5 பேர் ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சென்ற கார் ஊட்டி அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளத்தில் கவிழந்த காரை போலீசார் கண்டுபிடித்தபோது, அதில் 2 பேர் மட்டும் உயிருடன் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
 

9s1p2fg8


கடந்த ஞாயிறன்று ஊட்டியிலுள்ள ஸ்டெர்லிங் விடுதியில் சுற்றுலா சென்ற நண்பர்கள் அனைவரும் தங்கியுள்ளனர். மறுநாள் அவர்கள் வெளியில் செல்வதாக கூறி சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் அறைக்கு திரும்பாத காரணத்தினால், நிர்வாக தரப்பில் ஊட்டி காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஊட்டி போலீசார் தேடி வந்த நிலையில், அவர்கள் சென்ற கார் ஊட்டி கொண்டை ஊசி வளைவு அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது தெரிய வந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். வாகனத்திலிருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்து குறித்து, போலீசார் கூறும்போது, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க செல்போன் ஆபரேட்டர்களின் உதவியை நாடினோம். அவர்கள் அளித்த தகவலின் பேரிலே விபத்தில் சிக்கியிருந்தவர்கள் இருந்த இடத்தை கண்டு பிடிக்க முடிந்தது என்றனர்.

.