This Article is From Mar 22, 2019

10 வயது குழந்தையை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு இரட்டை ஆயுள்!

மஹிலா நீதிமன்ற அமர்வு நீதிபதி ஆர். விஜயகுமாரி 5 குற்றவாளிக்கும் குழந்தை கடத்தல், சித்திரவதை உட்பட பல்வேறு எண்ணிக்கையிலான குற்றங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளார். 

10 வயது குழந்தையை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு இரட்டை ஆயுள்!

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்தி சென்று இந்த கொடுஞ் செயலை புரிந்துள்ளனர். (மாதிரி படம்)

Salem, Tamil Nadu:

சேலத்தில் பத்து வயதுக் குழந்தையை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 5 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பளித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் நடந்த இந்த கொலைக்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. 

மஹிலா நீதிமன்ற அமர்வு நீதிபதி ஆர். விஜயகுமாரி 5 குற்றவாளிக்கும் குழந்தை கடத்தல், சித்திரவதை உட்பட பல்வேறு எண்ணிக்கையிலான குற்றங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளார். 

நீதிபதி இந்த தண்டனையை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தேதியன்று வாழப்பாடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்தி சென்று இந்த கொடுஞ் செயலை புரிந்துள்ளனர். 

பின் உடலை மரத்தில் தொங்கவிட்டு ஓடி விட்டனர். பெண் குழந்தையின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்கு விசாரணை நடைபெற்றது.  

குழந்தை பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றம் சட்டத்தின் கீழ் கடத்தல், கூட்டு வண்புனர்வு மற்றும் கொலை ஆகிய குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டது. 

.