বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 22, 2020

பஞ்சாப் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானுடன் 3,300 கி.மீ நீள எல்லைப் பகுதியை பகிர்ந்துக்கொள்ளும்  இந்தியாவில் அதிகபட்சமாக 5 ஊடுருவல்வாதிகள் கொல்லப்பட்டது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

இன்று அதிகாலை பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் ஊடுருவலில் ஈடுபட்ட ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கெம்கரன் எல்லைப் பகுதி வழியாக இவர்கள் ஊடுறுவ முயன்றதாக எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

103 பட்டாலியன் பிரிவினரால் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கையில் திடீரென ஊடுருவல்வாதிகள் துப்பாக்கிகளால் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட தொடங்கியுள்ளனர். இதில் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததன் காரணமாக 5 ஊடுருவல்வாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என எல்லை பாதுகாப்பு படை ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

எல்லை பாதுகாப்புப் படையினர் முதலில் நள்ளிரவில் எல்லையில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கவனித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் ஊடுருவியவர்கள் மீது கவனம் செலுத்தி கண்காணிப்பை பலப்படுத்தினர். அதிகாலை 4:45 மணியளவில் ஊடுருவல்வாதிகளை அடையாளம் காண முடிந்தது. ஊடுருவியவர்கள் துப்பாக்கிகளை ஏந்தி உயரமா புற்களுக்கு இடையில் மறைந்திருந்தனர். என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

பாகிஸ்தானுடன் 3,300 கி.மீ நீள எல்லைப் பகுதியை பகிர்ந்துக்கொள்ளும்  இந்தியாவில் அதிகபட்சமாக 5 ஊடுருவல்வாதிகள் கொல்லப்பட்டது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

சர்வதேச எல்லையின் மீதமுள்ள பகுதியை ஒன்றாகக் கொண்ட ஜம்மு, ராஜஸ்தான் மற்றும் குஜராத் தவிர, பஞ்சாப் 553 கி.மீ நீளமுள்ள ஒரு எல்லையை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

With additional inputs from PTI

Advertisement