This Article is From Oct 24, 2018

புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை!

லங்கை நாட்டைச் சேர்ந்த கடற்படை, மீனவர்களின் வலையைக் கிழித்துப் போட்டு அவர்களையும் கைது செய்துள்ளதாக தெரிகிறது

புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை!

புதுக்கோட்டையின் ஜெகதாம்பட்டிணத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தங்கள் நாட்டு எல்லைக்குள் வந்து மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை.

திங்கட்கிழமை நள்ளிரவு, நெடுந்தீவுக்கு அருகில் ஜெகதாம்பட்டிண மீனவர்கள், மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த கடற்படை, மீனவர்களின் வலையைக் கிழித்துப் போட்டு அவர்களையும் கைது செய்துள்ளதாக தெரிகிறது. 

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்திருக்கும்படி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். 

.