Read in English
This Article is From Jul 05, 2018

சிறுத்தையிடம் இருந்து தப்பித்த பெண், பள்ளத்தில் மாட்டிக்கொண்ட பரிதாபம்

தன்னை துரத்தி வந்த சிறுத்தையிடமிருந்து தப்பித்த பெண், 20 அடி பள்ளத்தில் விழுந்து மாட்டிக்கொண்டார்

Advertisement
Tamil Nadu
Coimbatore:

கோவை: தன்னை துரத்தி வந்த சிறுத்தையிடமிருந்து தப்பித்த பெண், 20 அடி பள்ளத்தில் விழுந்து மாட்டிக்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில், இரவு நேரத்தில் வெளி கழிப்பறைக்கு சென்ற 55 வயது பெண் சிறுத்தையை கண்டுள்ளார். இதனை அடுத்து, தப்பி செல்ல முயன்ற அந்தப் பெண்ணை சிறுத்தை துரத்தியுள்ளது. தப்பித்து ஓடிய அவர், தவறுதலாக 20 அடி நீளமுடைய பள்ளத்தில் விழுந்துள்ளார்.

பின்னர் அந்தப் பெண்ணை கண்டறிய முடியாததால், சிறுத்தை அங்கிருந்து சென்றது. இதனையடுத்து பள்ளத்தில் மாட்டிக்கொண்ட பெண் குரல் எழுப்பியதால், எஸ்டேட் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயம் அடைந்த அந்தப் பெண், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

செய்தி அறிந்த எஸ்டேட் அதிகாரிகள், மாயமான சிறுத்தையை பிடிக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். வேட்டை எதிர்ப்புப் பணியாளர்கள் பட்டாசுகள் வெடித்து சிறுத்தையை பயமுறுத்த விரைந்துள்ளனர்.

Advertisement