Read in English
This Article is From Jul 13, 2019

கோவையில் செப்டிக் டேங்கிலிருந்து 6 அடி நீள நல்லபாம்பு, ராட்சத காட்டுத் தேள் மீட்பு!!

ராட்சத தேள் மீட்கப்பட்டிருப்பது பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Edited by

வனத்துறை அதிகாரிகள் 2 உயிரினங்களை மீட்டனர்.

Coimbatore :

கோவையில் செப்டிக் டேங்கிலிருந்து 6 அடி நீளமுள்ள பாம்பு மற்றும் ராட்சத காட்டுத்தேள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. நஞ்சுண்டாபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 

நீண்ட குச்சியை பயன்படுத்திதான் பாம்பு மீட்கப்பட்டது. சில மணிநேர போராட்டத்திற்குப் பின்னர்தான் நல்லபாம்பு பிடிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட நல்ல பாம்பு மற்றும் ராட்சத தேள் ஆகியவை அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டன. இரு உயிரினங்கள் மீட்கப்பட்ட செப்டிக் டேங்க் பயன்பாட்டில் இல்லாதது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement