This Article is From Dec 28, 2018

புலியால் கொல்லப்பட்ட 62 வயது மூதாட்டி!

தண்ணீர் எடுத்து வர தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அந்த மூதாட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

புலியால் கொல்லப்பட்ட 62 வயது மூதாட்டி!

தண்ணீர் எடுத்து வர சென்றபோது புலியால் 500 மீட்டர் இழுத்து சென்று கொல்லப்பட்டார்.

Jaipur:

கடந்த வியாழகிழமையன்று, ராஜஸ்தானில் உள்ள பாவாய் மாதோபூர் வன பகுதியில் 62 வயது மூதாட்டி புலியால் கொல்லப்பட்டார்.

போலீசார் அளித்த தகவல் படி, கொல்லப்பட்ட மூதாட்டியும் மற்ற ஒரு பெண்ணும் தண்ணீர் எடுத்து வர சென்றபோது புலியால் 500 மீட்டர் இழுத்து சென்று கொல்லப்பட்டார். மேலும் அவர்கள் தண்ணீர் எடுத்து வர தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து கொல்லப்பட்ட மூதாட்டியின் உடலை போலீசார் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

.