Read in English
This Article is From Aug 23, 2020

நாடு முழுவதும் ஒரே நாளில் 69,239 பேருக்கு கொரோனா! 912 பேர் உயிரிழப்பு!!

இன்று காலை நிலவரப்படி தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் 74.89 ஆக உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 8.64 ஆக உள்ளது.

Advertisement
இந்தியா Edited by

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Highlights

  • கடந்த 24 மணி நேரத்தில், 69,239 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிப்பு
  • 912 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
  • தற்போது 7,07,668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30,44,941 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 69,239 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 912 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

தற்போது 7,07,668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 22,80,567 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 56,706 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று காலை நிலவரப்படி தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் 74.89 ஆக உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 8.64 ஆக உள்ளது.

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 8,01,147 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருபதாகவும், இதுவரை 3,52,92,220 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Advertisement