This Article is From Apr 12, 2019

தமிழ்நாட்டில் பதட்டத்துக்குரிய வாக்குச்சாவடிகள்… தேர்தல் ஆணையத்தின் பரபர நடவடிக்கைகள்

தமிழ் நாட்டில் 5.99 கோடி மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடையவர்கள் என்று உள்ளனர். 

தமிழ்நாட்டில் பதட்டத்துக்குரிய வாக்குச்சாவடிகள்… தேர்தல் ஆணையத்தின் பரபர நடவடிக்கைகள்

தமிழ்நாட்டில் உள்ள 39 சட்டசபை தொகுதிகளில் 7,780 வாக்குச் சாவடிகள் பதட்டத்துக்குரிய வாக்குச்சாவடிகளாக உள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

இது குறித்து நிரூபர்களிடம் பேசிய பிரதான தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சஹூ, பதட்டத்துக்குரிய வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுக்காப்பு படைகளை நிறுத்தி கண்காணிப்புகள் வைத்திருக்க உள்ளதாக தெரிவித்தார். தமிழ் நாட்டில் 5.99 கோடி மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடையவர்கள் உள்ளனர்

தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படைகள் 127 கோடிவரை கணக்கில் வராத பணத்தினை பறிமுதல் செய்துள்ளது.  ஏப்ரல் 18ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ளது. 

.