This Article is From May 06, 2019

வேலூர் அருகே நேர்ந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழப்பு

விபத்திற்குள்ளான வாகனம் கர்நாடகத்தை சேர்ந்தது என்றும், வாகனத்தில் இருந்தவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் அருகே நேர்ந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழப்பு

நசுங்கி போனதால் உடல்களை வாகனத்தில் இருந்து மீட்க போலீசார் சிரமப்பட்டனர்.

Vellore:

வேலூர் அருகே ஏற்பட்ட விபத்தில் சிக்கி குழந்தை உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். 

வேலூர் அருகே கர்நாடக பதிவு எண் கொண் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 3 ஆண்கள், குழந்தை உள்பட 7 பேர் இருந்தனர். 

இந்நிலையில், ஆம்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதியது. வேகம் அதிகமாக இருந்ததால் கார் சரக்கு லாரிக்கு அடியில் சென்றது. 

இந்த சம்பவத்தில் காரில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். அவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

உடல்கள் நசுங்கியதால் அவற்றை மீட்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

.