Read in English
This Article is From Aug 03, 2019

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை!

இதுவரை, ஏழு மாவோயிஸ்ட்களின் சடலங்களும், ஒரு ஏ.கே.-47 உட்பட ஒரு பெரிய வெடிகுண்டும் சம்பவ இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, என்று துணை ஆய்வாளர் (மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கைகள்) சுந்தர்ராஜ் கூறினார்.

Advertisement
இந்தியா Edited by

மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கையில் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Raipur:

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நக்ஸல் ஒழிப்பு போலீஸ் அதிகாரி சுந்தரராஜ் கூறுகையில், பாக்நதி காவல்நிலையத்துக்கு உட்பட்ட சீதாகோட்டா கிராமத்தின் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு இன்று அதிகாலை 6 மணி முதல் மவோயிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், அவர்கள் வசம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி உட்பட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவித்தார். 

மேலும், தேடல் நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்று வருவதால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என தெரிகிறது. 

Advertisement
Advertisement