Read in English
This Article is From Apr 25, 2019

குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பல் ஆந்திரபிரதேசத்தில் கைது

முக்கிய குற்றவாளியான வி.கங்காதர் ரெட்டி மற்றும்  4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். ஹைதராபாத் போலீஸ் சிறப்பு குழுவினர் குழந்தைகளை கடத்தும் கும்பலை கைது செய்துள்ளனர்.

Advertisement
Andhra Pradesh

பிறந்து 1மாதமே ஆன குழந்தை உட்பட 3 குழந்தைகள் மீட்கப்பட்டனர் (Representational)

Hyderabad:

ஆந்திராவில் குழந்தைகளை கடத்தும் 7 பேர் கொண்ட கும்பல் கைது. பிறந்து 1மாதமே ஆன குழந்தை உட்பட 3 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

முக்கிய குற்றவாளியான வி.கங்காதர் ரெட்டி மற்றும்  4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். ஹைதராபாத் போலீஸ் சிறப்பு குழுவினர் குழந்தைகளை கடத்தும் கும்பலை கைது செய்துள்ளனர்.

ஒரு பெண் குழந்தை  மற்றும் இரண்டு வயதுடைய 2 ஆண் குழந்தைகள்  மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

ஹைதராபாத் மற்றும் குண்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து 3 குழந்தைகளை மார்ச் 2018 அக்டோபர் மாதம் கடத்தியுள்ளார். ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 3.10 லட்சம் வரை குழந்தைகள் விற்கப்பட்டுள்ளனர். 

Advertisement

குழந்தைகளற்ற தம்பதிகளுக்கு குழந்தைகளை விற்றதாக இன்ஸ்பெக்டர் ஜி.கோட்டீஸ்வர் ராவ் கூறினார். 

மீட்கப்பட்ட குழந்தைகளை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

Advertisement
Advertisement