Coimbatore:
கோவை அருகே உள்ள ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த 75 வயது சித்த வைத்தியர் வெள்ளியங்கிரி மலையில் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நிலையில் கிடப்பவர் முள்ளங்காடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த கிட்டி என்பது தெரியவந்தது. வெள்ளயங்கிரி மலைக்கு மூலிகை பறிக்க சென்ற அவர் திரும்பிவரவில்லை.
இதையடுத்து, கிட்டியை தேடி சென்றபோது, காட்டில் கிட்டி பிணமாக கிடந்தார். அவரது குடல் வெளியே தள்ளியபடி இருந்தது. கிட்டியை யானை மிதித்து கொன்றது தெரிய வந்தது.
தொடர்ந்து, யானை தாக்கி பலியான கிட்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
COMMENTS
Advertisement