This Article is From Jan 28, 2019

உத்தரகாண்டில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி

உயிரிழந்த சடலம் வேனில் எடுத்துச் செல்லப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்டில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி

பள்ளத்தில் விழுந்தவர்கள் கயிறு மூலம் மீட்கப்படும் காட்சி.

Dehradun:

உத்தரகாண்டில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

உயிரிழந்த ஒருவரின் உடல் தகனத்திற்காக வேனில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. உத்தரகாண்டின் சம்பவாத்  மாவட்டத்தில் பிதோராகர் பகுதியில் வேன் சென்றபோது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 8 பேர் உயிரிழந்தனர். 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

.